Pages

Pages

Thursday, June 2, 2016

மரபுரிமை சின்னங்களின் பாதுகாப்பு அளவுத்திட்டங்கள்

ஆகக்குறைந்தளவிலான தலையீடும் கலாசார சொத்துக்களுக்கு பொருத்தமான கால நிலையுடன் தொடர்புடைய  தொழில்நுட்பமும் முக்கியமானது. பௌதிகவியல் மாசடைதல் போக்குவரத்து அதிர்வுகுள் முக்கியமாக கருதப்படுவதுடன் நிலநடுக்கம், வெள்ளப்பெருக்கு தொடர்பான கால நிலைகளும் அவதானிக்கப்பட வேண்டும். பாதிக்கப்படும் கலாசார சொத்துக்களை எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாத்து வழங்குதலே இதன் வழக்கமான செயற்பாடாகும்.                                                                                                                                    
                       மரபுரிமை சொத்துக்களின் பாதுகாப்பு  பல்வேறுபட்ட அளவுத்திட்டங்களில் தங்கியுள்ளது.  பாரிய அளவிலான பாதுகாப்பு செயற்திட்ட நடவடிக்கைகளில் பாதுகாப்பு ஒவ்வொரு பகுதிக்கும் பொருத்தமான அளவீட்டுத்திட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவையாவன                                                              சிதைவடைவதை தவிர்த்தல் - prevention  of deterioration                           பத்திரப்படுத்தல் - preservation                பலப்படுத்தல் - consolidation                   புதுப்பித்தல் - restroration                         புணரமைத்தல் - rehabilitation                      மீள் உற்பத்தி - reproduction                      மீள்கட்டுமானம் - reconstruction

யாழ்ப்பாண இராசதானி கால நாணயங்கள்

கிபி 13 ஆம் நூற்றாண்டில் இருந்து கிபி 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை நல்லூரை தலைநகராக கொண்டு யாழ்ப்பாண இராசதானி தோற்றம் பெற்றது. பாளி , சிங்கள, தமிழ் இலக்கியங்கள் , இலங்கை தென்னிந்திய கல்வெட்டுக்கள், போத்துக்கேய ஆவணங்கள் என்பன இவ்வரசு பற்றி அறிய உதவுகின்றன. 350 ஆண்டுகள் நல்லூரை தலைநகரமாக கொண்டு வட இலங்கையில் ஆட்சி புரிந்துள்ள போதிலும் அதன் வரலாற்றை முழுமையாக அறியக் கூடிய சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை. இவ்வரசு பற்றி சிங்கள , தமிழ் இலக்கியங்களில் சில செய்திகள் காணப்பட்டாலும் அவை யாழ்ப்பாண மன்னர்களின் வரலாற்றை காலநிரைப்படுத்தி கூற உதவவில்லை.
                  ஓரிரு கல்வெட்டுக்கள் கிடைத்துள்ள  போதிலும் அவை விரிவான தகவல்களை தரவில்லை. ஆனால் அரசு ஒன்று நீண்டகாலமாக ஆட்சி புரிந்ததையும் அது அரசியல், பொருளாதார, பண்பாடு , உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தக தொடர்புகள் போன்றவற்றால் மேம்பட்டு இருந்ததையும் ஓரளவுக்கு எடுத்துக்காட்டும் சான்றுகளில் ஒன்றாக இவ்வரசு கால மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள் விளங்கியுள்ளன. அவையாவன    சேது நாணயங்கள் , கந் என்று பெயர் பொறித்த நாணயம், ஆ என்று எழுத்து பொறித்த நாணயம்.                                                                         
                    இந்நாணயங்கள் இலங்கையிலும் , தமிழகத்திலும்  கிடைத்து வருகின்ற போதிலும் எண்ணிக்கையில் அதிகமாக வட இலங்கையில் திருநெல்வேலி, நல்லூர், கோப்பாய், அச்சுவேலி, புத்தூர், சண்டிலிப்பாய், மாதோட்டம், மாங்குளம், பூநகரி போன்ற பல இடங்களில் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவற்றின் மூலமாக யாழ்ப்பாண மன்னர்கள் நாணயங்களை வெளியிட்டதை அறிய முடிகின்றது.

Wednesday, April 27, 2016

வட மாகாணத்தில் சாவகன் சந்திரபாணுவின் ஆட்சி இடம்பெற்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது


 மாகாணத்தில்  சாவகன் சந்திரபாணுவின் ஆட்சி இடம்பெற்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது


யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்களால் வடமாகாணத்தில்  கட்டுக்கரையில்  குடுவில் என்னும் இடத்தில்  சாவக மன்னனின் ஆட்சி இடம் பெற்றமைக்கு சான்றாக ஸ்ரீ சாவக என பெயர் பொறிக்கப்பட்ட நாணயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Kool Kool


https://www.youtube.com/watch?v=4Y0v7GkTiNE&noredirect=1

Kool Kool

Tuesday, April 5, 2016

தமிழரின் தொன்மையான வரலாறு

தமிழரின் தொன்மையான வரலாறு                                                                                      திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் 17 கி.மீ. தொலைவில் தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர்.

இயக்கச்சியின் வரலாறு

                                                                                                   அமைவிடம்

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் அமைந்திருக்கும் இயக்கச்சியின் கிராம அலுவர் பிரிவு எண் KN/79.
ஏ9 என்ற யாழ்ப்பாணம் - கண்டி வீதி இயக்கச்சியை ஊடறுத்துச் செல்கிறது.
இந்த வீதியின் முக்கிய திருப்பம் அமைந்துள்ள இடமே இயக்கச்சிச் சந்தியாகும். இந்தச் சந்தியிலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் சாலையில் 16 கிலோ மீற்றர் தொலைவில் பிரசித்திபெற்ற சுண்டிக்குளம் கடற்கரை உள்ளது. இங்கே சுற்றுலாப்பயணிகளுக்கான Natural Park என்ற உல்லாச விடுதியும் வலசைப் பறவைகளி்ன் சரணாலயமும் உண்டு. வடக்கே வீரக்களி ஆறும் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவும் வங்கக் கடலும் உள்ளன. தெற்கே ஆனையிறவு உப்பளமும் கடல் நீரேரியும் உள்ளன. மேற்கே பளை நகரம் உள்ளது.

வரலாறு

இலங்கையின் தொல்குடியிருப்புகளில் ஒன்று இயக்கச்சி எனவும் இயக்கர் குலத்தினர் இங்கே வாழ்ந்திருப்பதாகவும் வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனாற்றான் இயக்கச்சி எனப் பெயர் விளங்கியதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். மிகப் பிரசித்தி பெற்ற நீர்க்கிணறுகள் இங்கே உண்டு. தொன்மையான நீர்க்கிணறுகள் மரத்தினாலும் முருகைக்கற்களாலும் உருவாக்கப்பட்டவை. இப்பொழுதும் இங்கிருந்து அயற்பிரதேசங்களுக்கான நீர் விநியோகம் நடைபெற்று வருகிறது.
இயக்கச்சி பொருளாதார ரீதியாகவும் படைத்துறை நிலையிலும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரதேசமாக இருந்துள்ளது. ஒல்லாந்தரால் கட்டப்பட்ட pyl என்ற கற்கோட்டை இங்கே இருந்தது. இப்பொழுது சிதைவடைந்த கோட்டையின் எச்சங்கள் அந்தப் பகுதியில் மிஞ்சிக் காணப்படுகின்றன. இந்தக் கோட்டையிலிருந்து வடக்காக மூன்று கிலோ மீற்றர் தொலைவில் வெற்றிலைக்கேணி Basurta கோட்டையும் தெற்கே ஒரு கிலோ மீற்றர் தொலைவில் ஆனையிறவு Basculla கோட்டையும் உள்ளன. விடுதலைப்புலிகளுக்கும் இலங்கைப் படையினருக்குமிடையிலான போரில் இந்தக் கோட்டைகள் 1991 மற்றும் 2000 ஆண்டுக் காலப்பகுதியில் முற்றாக அழிந்து விட்டன. இப்பொழுது வெற்றிலைக்கேணியில் வெளிச்ச வீடு மட்டும் மிஞ்சியுள்ளது.
விடுதலைப் புலிகளால் ஆனையிறவுத்தளம் முற்றுகையிடப்பட்டபோது இயக்கச்சியையே பிரதான தளமாகப் பயன்படுத்தப்பட்டது. இதனால் போரின் கூடுதலான அழிவுகளைச் சந்தித்த பிரதேசமாகியது.

ஆலயங்கள்

மண்டலாய்ப்பிள்ளையார் கோயில், மல்வில் கிருஷ்ணன் கோயில், கண்ணகை அம்மன்கோயில், சின்னமண்டலாய்ப் பிள்ளையார் கோயில், பறையன்குளம் பிள்ளையார் கோயில் என்பன இயக்கச்சியில் உள்ள தொன்மையான ஆலயங்களாகும். 400 ஆண்டுகளுக்கு முன் பெரிய வல்லியக்கன் கோயில் இயக்கச்சியில் இருந்ததாகவும் அது பின்னர் மல்வில் கிருஷ்ணன் கோயிலாக மருவியுள்ளதாகவும் வரலாற்றாசிரியர் பொ. இரகுபதி குறிப்பிட்டிருக்கிறார்.
கிழக்கே சுண்டிக்குளம் வீதியில் புல்லாவெளி அந்தோனியார் என்ற ஒல்லாந்தர் காலத்துத் தேவாலயம் உள்ளது. மிகப் பிரசித்து பெற்ற தேவாலயம் இதுவாகும்.

கலை

நாட்டுப்புறக்கலைகள் பாரம்பரியமாகவும் மரபு ரீதியாகவும் கொண்டாடப்பட்டு வருகின்றன. மரபுரீதியான கூத்தாட்டமும் பாட்டும் ஆண்டுதோறும ஆடப்பட்டு வருகிறது.

Monday, April 4, 2016

1000 ஆண்டுகால பட்பாண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டன

பல்கலைக்கழக தொல்லியல் துறையினரால் செட்டிகுளத்தில் 1000 ஆண்டுகால  மட்பாண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.